அழகே அழகு.. தேவதை…!
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் !
--
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது !
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது !
பொன்முகம் தாமரை !
பூக்களே கண்களோ !
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம் !
--
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன !
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன !
மூங்கிலே தோள்களோ !
தேன்குழல் விரல்களோ !
ஒரு அங்கம் கைகள் அறியாதது !
--
பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன் !
போக போக வாழை போல
அழகை காண்கிறேன் !
மாவிலை பாதமோ !
மங்கை நீ வேதமோ !
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே !