Tuesday, June 26, 2012

அழகே அழகு.. !


அழகே அழகு.. தேவதை…!
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் !
--
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது !
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது !
பொன்முகம் தாமரை !
பூக்களே கண்களோ !
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம் !
--
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன !
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன !
மூங்கிலே தோள்களோ !
தேன்குழல் விரல்களோ !
ஒரு அங்கம் கைகள் அறியாதது !
--
பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன் !
போக போக வாழை போல
அழகை காண்கிறேன் !
மாவிலை பாதமோ !
மங்கை நீ வேதமோ !
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே !

தேவதை கவிதை !




கதிரவன் கண்விழிக்க‌
கடற்கரையோரம் நீ சென்ற‌
காலையில்
மாநாடு கூடிவிட்டதாம்
தேவதைகளின் ஊர்வலமென்று...!
--
 எல்லா கவிஞனும் கவிதை எழுத
உன் ஒருத்தியை மட்டும்
சுற்றி அலைவதால்
உன்னைக் கோள்கடத்தச் சொல்லி
தேவதைகள் சங்கத்தின் கோரிக்கை !
--
தேவதை உலகின்
அழகிப் போட்டிகளிலெல்லாம்
அளவுகோலும்
ஆதர்சன நாயகியும்
நீயென்பது உனக்கு தெரியுமா?
--
வெள்ளை தாவணியில் வெளியே வராதே
என்றால் கேட்டால்தானே!!!
பார்...
அழகென்று கர்வங்கொண்ட‌
ஆயிரம் தேவதைகளின் தற்கொலைதான்
இன்றைய தலைப்புச் செய்தி....!

--விஜய் ஆனந்த்

Tuesday, June 19, 2012

தேன் முத்தம் !


முத்தம் கொடுத்துவிட்டு
மூடி மறைக்காதே..!
உன் எச்சில் பட்ட என் உதட்டை
மொய்க்கின்றன தேனீக்கள் !

-- விஜய் ஆனந்த்

Monday, June 18, 2012

சிரிக்காதே பெண்ணே !



மீண்டும் ஒருமுறை
சிரிக்காதே பெண்ணே !
நீ
ஒருமுறை சிரித்ததற்கே
இறந்து கிடக்கிறது இசைத்தமிழ் !


--விஜய் ஆனந்த்

Friday, June 8, 2012

புத்தகமாய் !

என்னையும்
விரலால் அணைத்து
இதழால் படித்து
இதயத்தில் - பத்திரமாய்
பதிய வைத்திருப்பாய்
நானும் உன் பாடப்புத்தகமாய்
பிறந்திருந்தால் !

-- விஜய் ஆனந்த்