Tuesday, June 26, 2012

தேவதை கவிதை !




கதிரவன் கண்விழிக்க‌
கடற்கரையோரம் நீ சென்ற‌
காலையில்
மாநாடு கூடிவிட்டதாம்
தேவதைகளின் ஊர்வலமென்று...!
--
 எல்லா கவிஞனும் கவிதை எழுத
உன் ஒருத்தியை மட்டும்
சுற்றி அலைவதால்
உன்னைக் கோள்கடத்தச் சொல்லி
தேவதைகள் சங்கத்தின் கோரிக்கை !
--
தேவதை உலகின்
அழகிப் போட்டிகளிலெல்லாம்
அளவுகோலும்
ஆதர்சன நாயகியும்
நீயென்பது உனக்கு தெரியுமா?
--
வெள்ளை தாவணியில் வெளியே வராதே
என்றால் கேட்டால்தானே!!!
பார்...
அழகென்று கர்வங்கொண்ட‌
ஆயிரம் தேவதைகளின் தற்கொலைதான்
இன்றைய தலைப்புச் செய்தி....!

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment