என் செவிகளுக்கும்
நாவிருந்திருந்தால்
உன் கொஞ்சல் மொழி சுவைத்து
தித்தித்திருக்கும் !
--
எப்படியாவது
உன்னை விட அழகாக வேண்டும்
என்று
அழகுக்கலை கற்றுக் கொள்கிறதாம்
நிலவு !
--
பூமி
தன்னைத் தானே
சுற்றிக் கொள்கிறதாம் !
ஒருவேளை
உன் பேரழகைப் பார்த்த
பேரதிர்ச்சியாய் இருக்குமோ?
--
மழை பெய்யும் போது
வெளியில் சென்று விடாதே !
மழை உன்னழகில்
நனைந்துவிடப் போகிறது !
--விஜய் ஆனந்த்