Friday, August 31, 2012

கவிதைக்கான கவிதைகள் !

என் செவிகளுக்கும்
நாவிருந்திருந்தால் 
உன் கொஞ்சல் மொழி சுவைத்து
தித்தித்திருக்கும் !
--

எப்படியாவது 
உன்னை விட அழகாக வேண்டும்
என்று
அழகுக்கலை கற்றுக் கொள்கிறதாம் 
நிலவு !
--

பூமி 
தன்னைத் தானே 
சுற்றிக் கொள்கிறதாம் !
ஒருவேளை 
உன் பேரழகைப் பார்த்த 
பேரதிர்ச்சியாய்  இருக்குமோ?
--

மழை பெய்யும் போது
வெளியில் சென்று விடாதே !
மழை உன்னழகில்
நனைந்துவிடப் போகிறது !

--விஜய் ஆனந்த் 

No comments:

Post a Comment