Friday, July 22, 2011

எங்கே சென்றாயோ ?

உன் உயிரும்
என் உயிரும்
என்னுள்ளே
பின்னிக் கிடந்ததடி !

உன் மனதும்
என் மனதும்
என்னுள்ளே
பேசிக் கொண்டதடி !

உன் உயிர் பிரித்தாய் !
உடன்
என் உயிரையும்
உருவிக் கொண்டாயடி !

நீ
இல்லாமல் நான்
எப்படி !
சிந்திப்பாயா தோழி !

எனக்கு
ஏன் இந்த வேதனை !
உள்ளம் வலிக்குதடி !
கண்கள் அழுகுதடி !

என்
வாழ்க்கை ஏங்குதடி !
தினம்
உன் மடி தேடி
அலையுதடி !

வாழ்க்கை கசக்குதடி !
உயிரில் நோகுதடி !

மீண்டும்
எனக்குள் வந்து விடடி !
மோட்சம்
எனக்கு தந்து விடடி தோழி !
--
" நீ இல்லாம ரொம்பவே வலிக்குதுடா தங்கம் ! சீக்கிரமே என்கிட்டே வந்துடு ! "

-- விஜய் ஆனந்த்

Wednesday, July 6, 2011

என்று காண்பேன்?

வகிடெடுத்து வாரிய கருங்கூந்தல்
காதோரம் தொட்டில் கட்டி ஆடும் கம்மல்
பின்னலுடன் பின்னி விளையாடும் மல்லிகை
மொழியின்றி கவிதை வரையும் கண்கள்
சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் இமைகள்
கருப்பு நிலவாய் இரு கருவிழிகள்
பார்த்தாலே தித்திக்கும் இதழ்கள்
இலவம்பஞ்சில் இழைத்த ஈரைந்து விரல்கள்
இறகினும் மெல்லிய பாதங்கள்
கவிதைகள் பேசிடும் புன்சிரிப்பு
காவியங்கள் காட்டிடாத உடலமைப்பு !
தேரோடும் நடையழகு !
மெல்லிய இடையழகு !

என்று காண்பேன் என் தேவதையை !

--விஜய் ஆனந்த்