வகிடெடுத்து வாரிய கருங்கூந்தல்
காதோரம் தொட்டில் கட்டி ஆடும் கம்மல்
பின்னலுடன் பின்னி விளையாடும் மல்லிகை
மொழியின்றி கவிதை வரையும் கண்கள்
சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் இமைகள்
கருப்பு நிலவாய் இரு கருவிழிகள்
பார்த்தாலே தித்திக்கும் இதழ்கள்
இலவம்பஞ்சில் இழைத்த ஈரைந்து விரல்கள்
இறகினும் மெல்லிய பாதங்கள்
கவிதைகள் பேசிடும் புன்சிரிப்பு
காவியங்கள் காட்டிடாத உடலமைப்பு !
தேரோடும் நடையழகு !
மெல்லிய இடையழகு !
என்று காண்பேன் என் தேவதையை !
--விஜய் ஆனந்த்
காதோரம் தொட்டில் கட்டி ஆடும் கம்மல்
பின்னலுடன் பின்னி விளையாடும் மல்லிகை
மொழியின்றி கவிதை வரையும் கண்கள்
சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் இமைகள்
கருப்பு நிலவாய் இரு கருவிழிகள்
பார்த்தாலே தித்திக்கும் இதழ்கள்
இலவம்பஞ்சில் இழைத்த ஈரைந்து விரல்கள்
இறகினும் மெல்லிய பாதங்கள்
கவிதைகள் பேசிடும் புன்சிரிப்பு
காவியங்கள் காட்டிடாத உடலமைப்பு !
தேரோடும் நடையழகு !
மெல்லிய இடையழகு !
என்று காண்பேன் என் தேவதையை !
--விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment