Friday, July 22, 2011

எங்கே சென்றாயோ ?

உன் உயிரும்
என் உயிரும்
என்னுள்ளே
பின்னிக் கிடந்ததடி !

உன் மனதும்
என் மனதும்
என்னுள்ளே
பேசிக் கொண்டதடி !

உன் உயிர் பிரித்தாய் !
உடன்
என் உயிரையும்
உருவிக் கொண்டாயடி !

நீ
இல்லாமல் நான்
எப்படி !
சிந்திப்பாயா தோழி !

எனக்கு
ஏன் இந்த வேதனை !
உள்ளம் வலிக்குதடி !
கண்கள் அழுகுதடி !

என்
வாழ்க்கை ஏங்குதடி !
தினம்
உன் மடி தேடி
அலையுதடி !

வாழ்க்கை கசக்குதடி !
உயிரில் நோகுதடி !

மீண்டும்
எனக்குள் வந்து விடடி !
மோட்சம்
எனக்கு தந்து விடடி தோழி !
--
" நீ இல்லாம ரொம்பவே வலிக்குதுடா தங்கம் ! சீக்கிரமே என்கிட்டே வந்துடு ! "

-- விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment