Friday, December 9, 2011

தேவதை நீ !

நீயிறங்கிக் குளிக்கும்போது
நீர்த்தொட்டி -- பூந்தொட்டி
குளித்து விட்டு வெளியேறியதும்
பூந்தொட்டி -- தேன்தொட்டி
**
நீ
கவிதையாக்கப்பட வேண்டிய ஓவியமா?
ஓவியமாக்கப்பட வேண்டிய கவிதையா?
**
என்னை
வதைத்தே கொள்ளும்
தேவதை நீ !
**
என் இரவில்
நீ கனவு !
என் பகலில்
நீ நினைவு !
**
உன் உதட்டோரம் 
ஒட்டியிருக்கும் ஒரு 
சோற்றுப் பருக்கை போதும்
நான் பசியாற !
**
கொஞ்சி கொஞ்சி நீ
பேசும்போது தான் தெரிகிறது 
தமிழ் 
செம்மொழி என்று !
**
உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன் 
இடையில் வந்து போகிறது
பகல்,இரவு, பசி, தூக்கம் எல்லாம் !

-- விஜய் ஆனந்த் 

No comments:

Post a Comment