Monday, January 23, 2012

கிறுக்கல்கள்

சாணந் தெளித்து கோலமிட்டு
புதுக் கரும்பு படைத்து
அரிசி புடைத்து வண்ணப் 
பானையில் பொங்கல் வைத்தேன் !
வீட்டின் முற்றத்தில் இருந்து 
எட்டிப் பார்த்தாய் நீ !
பொங்கல் பானை கத்தியது 
"பொங்கலோ பொங்கல்" !
***
குழந்தையும் நீயும் 
ஒன்றாம்  !
கர்வப்பட்டன குழந்தைகள் !
***
உன்னைக் கடித்த
கொசு 
தேனீயாக மாறியிருந்தது !
***

--விஜய் ஆனந்த் 

No comments:

Post a Comment