சாணந் தெளித்து கோலமிட்டு
புதுக் கரும்பு படைத்து
அரிசி புடைத்து வண்ணப்
பானையில் பொங்கல் வைத்தேன் !
வீட்டின் முற்றத்தில் இருந்து
எட்டிப் பார்த்தாய் நீ !
பொங்கல் பானை கத்தியது
"பொங்கலோ பொங்கல்" !
***
குழந்தையும் நீயும்
ஒன்றாம் !
கர்வப்பட்டன குழந்தைகள் !
***
உன்னைக் கடித்த
கொசு
தேனீயாக மாறியிருந்தது !
***
--விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment