Tuesday, January 24, 2012

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று !




எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
***
கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா !
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா !
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா !
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே அதுவா !
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
***
முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா !
சங்கு கழுத்தை பாசிமணிகள் தடவுகின்றதே அதுவா !
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய் அதுவா !
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய் அதுவா !
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
***

No comments:

Post a Comment