பாடித்தான்
கவிதைகளும் கவிதையானதோ ?
***
ஓவியமாக
வரைந்து வைத்தேன் உன்னை !
அழகாக மாறியிருந்தது
தூரிகை !
***
சிணுங்கினாய் நீ !
பாட்டுக்கச்சேரி என நினைத்து
பாடத் தொடங்கியது
குயில் கூட்டம் !
***
புன்னகைத்தாய் நீ !
வெட்கப்பட்டது இசைத்தமிழ் !
***
நீ
முகம் கழுவிய நீரைக் கொண்டு
அழகாகிக் கொண்டது
உன் தோட்டத்து ரோஜாச் செடி !
***
--விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment