Tuesday, January 24, 2012

கிறுக்கல்கள்



உன்னைப் பற்றி
பாடித்தான்
கவிதைகளும் கவிதையானதோ ?
***
ஓவியமாக
வரைந்து வைத்தேன் உன்னை !
அழகாக மாறியிருந்தது 
தூரிகை !
***
சிணுங்கினாய்  நீ !
பாட்டுக்கச்சேரி என நினைத்து
பாடத் தொடங்கியது 
குயில் கூட்டம் !
***
புன்னகைத்தாய் நீ !
வெட்கப்பட்டது  இசைத்தமிழ் !
***
நீ
முகம் கழுவிய நீரைக் கொண்டு
 அழகாகிக் கொண்டது
உன் தோட்டத்து ரோஜாச் செடி !
***

--விஜய் ஆனந்த் 


No comments:

Post a Comment