Wednesday, February 22, 2012

பிரிவு !



தூரமாய் வட்ட நிலவு 
சூழ எங்கும் கரும் இருள் 
சில்லென்று தேகம் வருடும் தென்றல் 
உடல் எங்கும் சில்லிட்ட போதும் 
என் கண்ணீரின் வெப்பம் குறையவில்லை 

கடலாய் அழுதுவிட்டேன்
காரணம் சொல்லாமல் பிரிந்துவிட்டாய்
தனிமையில் தவிக்கின்றேன்
எனை தவிக்கவிட்டு எங்கு சென்றாய்

காய்ந்து போன மனதில்
ஈரமான நம்பிக்கையுடன்
அடுத்த ஜென்மமும் காத்திருப்பேன்
அந்த ஜென்மமாவது வாழ்ந்திடுவோம்
பிரிவென்ற துயர் நம்மை நெருங்காமல் ...!

Monday, February 20, 2012

அன்பே அன்பே !


அன்பே அன்பே கொல்லாதே !
கண்ணே கண்ணைக் கிள்ளாதே !
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே !
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே !
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி !
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி !
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி !
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி !
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி !
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி !
கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா !
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா !
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா !
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா !
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன் !
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன் !
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் !
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் !
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் !
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் !

எத்தனை புள்ளிக்கோலம் நீ !



உன் 
உடம்பில் உள்ள மச்சங்களை 
எண்ணிச்சொல் பெண்ணே !
நீ
எத்தனை புள்ளிக்கோலம் 
என்று எனக்கு தெரிய வேண்டும் !

-- விஜய் ஆனந்த்

Tuesday, February 14, 2012

காதலர் தினம் !

பெண்ணே ! 
உன்னைப் பார்த்து
காதலுக்குள் 
காதல் பிறந்த தினம் 
-"காதலர் தினம் "- !

என் காதல் தேவதையின் நினைவுகளுடன் 
--விஜய் ஆனந்த்