தூரமாய் வட்ட நிலவு
சூழ எங்கும் கரும் இருள்
சில்லென்று தேகம் வருடும் தென்றல்
உடல் எங்கும் சில்லிட்ட போதும்
என் கண்ணீரின் வெப்பம் குறையவில்லை
கடலாய் அழுதுவிட்டேன்
காரணம் சொல்லாமல் பிரிந்துவிட்டாய்
தனிமையில் தவிக்கின்றேன்
எனை தவிக்கவிட்டு எங்கு சென்றாய்
காய்ந்து போன மனதில்
ஈரமான நம்பிக்கையுடன்
அடுத்த ஜென்மமும் காத்திருப்பேன்
அந்த ஜென்மமாவது வாழ்ந்திடுவோம்
பிரிவென்ற துயர் நம்மை நெருங்காமல் ...!
No comments:
Post a Comment