ஆழியிலே முக்குளிக்கும் அழகே !
ஆவியிலே தத்தளிக்கும் அழகே !
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா !
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா !
என் ஜென்மம் ஈடேறவா !
ஆழியிலே முக்குளிக்கும் அழகே !
ஆவியிலே தத்தளிக்கும் அழகே !
உன் விம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர் இலை வைக்கவா ?
உன் உம் என்ற சொல்லுக்கும் விம் என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா ?
மௌனத்தில் குடி வைக்கவா ?
அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காது அழகே 1
அடிவானம் சிவந்தாலும் கொடிபூக்கள் பிளந்தாலும்
உனை போல இருக்காது அழகே !
அழகே அழகே வியக்கும் அழகே !
No comments:
Post a Comment