Wednesday, March 21, 2012

கிறுக்கல்கள்

அடுத்த பிறவியில் 
உன் பெயரில் உள்ள 
எழுத்துக்களாய் 
பிறக்க ஆசை !
அப்பொழுதாவது  நீ
என்னை உச்சரிப்பாய் என்கின்ற நம்பிக்கையில் !
--

கடவுளை நேரில் 
கண்டதில்லை நான் !
ஆனால் தினமும் பேசுகிறேன் கடவுளிடம் !
உன்னைப் பார்க்காமலே 
நான் உன்னிடம் பேசுவதை போல் !
--

உன் 
ஒவ்வொரு அசைவும் 
கவிதைகளாய் எழுதப்படுகிறது  என்னுள் !
--

நம் காதலில்
பிறந்த என் கவிதைக் குழந்தை
உன் பிரிவால் இன்று அனாதையாய !

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment