அடுத்த பிறவியில்
உன் பெயரில் உள்ள
எழுத்துக்களாய்
பிறக்க ஆசை !
அப்பொழுதாவது நீ
என்னை உச்சரிப்பாய் என்கின்ற நம்பிக்கையில் !
--
கடவுளை நேரில்
கண்டதில்லை நான் !
ஆனால் தினமும் பேசுகிறேன் கடவுளிடம் !
உன்னைப் பார்க்காமலே
நான் உன்னிடம் பேசுவதை போல் !
--
உன்
ஒவ்வொரு அசைவும்
கவிதைகளாய் எழுதப்படுகிறது என்னுள் !
--
நம் காதலில்
பிறந்த என் கவிதைக் குழந்தை
உன் பிரிவால் இன்று அனாதையாய !
--விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment