Wednesday, March 21, 2012

தாலாட்டும் காற்றே வா !



தாலாட்டும் காற்றே வா !
தலை கோதும் விரலே வா !
தொலைதூர நிலவே வா !
தொட வேண்டும் வானே வா !

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் 
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமல் 
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் 
என் ஆவி சிறிதாகி போவேனோ?

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...!

கண்ணுக்குள் கண் வைத்து,
கண் இமையால் கண் தடவி,
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ?
பேச்சிழந்த வேளையிலே,
பெண்ணழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை நுகராமல் போவேனோ ?
உன் கட்டுக்கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத்தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை 
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை 
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் 
அதை உனக்கு ஒலிபரப்ப மாட்டேனோ?

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...!

ஒரு நாள் ஒரு பொழுது,
உன் மடியில் நான் இருந்து,
திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து தல்லாடும் மரம் ஏறி,
இலையெல்லாம் உன் பெயரை எழுதாமல் போவேனோ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ?
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி 
நீ வாழும் வரை நானும் வாழேனோ?

என் உரிமை நீதானோ
என் உரிமை நீதானோ...!

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் 
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமல் 
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் 
என் ஆவி சிறிதாகி போவேனோ?

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...! 

கிறுக்கல்கள்

அடுத்த பிறவியில் 
உன் பெயரில் உள்ள 
எழுத்துக்களாய் 
பிறக்க ஆசை !
அப்பொழுதாவது  நீ
என்னை உச்சரிப்பாய் என்கின்ற நம்பிக்கையில் !
--

கடவுளை நேரில் 
கண்டதில்லை நான் !
ஆனால் தினமும் பேசுகிறேன் கடவுளிடம் !
உன்னைப் பார்க்காமலே 
நான் உன்னிடம் பேசுவதை போல் !
--

உன் 
ஒவ்வொரு அசைவும் 
கவிதைகளாய் எழுதப்படுகிறது  என்னுள் !
--

நம் காதலில்
பிறந்த என் கவிதைக் குழந்தை
உன் பிரிவால் இன்று அனாதையாய !

--விஜய் ஆனந்த்

Monday, March 5, 2012

அழகே வியக்கும் அழகே !



ஆழியிலே முக்குளிக்கும் அழகே !
ஆவியிலே தத்தளிக்கும் அழகே !
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா  !
உன் இடையோடு நடமாடும் உடையாக 
நான் மாறி எந்நாளும் சூடேறவா !
என் ஜென்மம் ஈடேறவா !

ஆழியிலே முக்குளிக்கும் அழகே !
ஆவியிலே தத்தளிக்கும் அழகே !
உன் விம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று
இதழ் வைக்கவா இச்சைக்கோர் இலை வைக்கவா ?
உன் உம் என்ற சொல்லுக்கும் விம் என்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா ?
மௌனத்தில் குடி வைக்கவா ?  

அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி
மரித்தாலும் மறக்காது அழகே 1
அடிவானம் சிவந்தாலும் கொடிபூக்கள் பிளந்தாலும் 
உனை போல இருக்காது அழகே ! 
அழகே அழகே வியக்கும் அழகே !