Saturday, May 26, 2012

கிறுக்கல்கள்

நாளைக்கும் நீ
கோவிலுக்கு வரவேண்டும்
என்று வேண்டிக்கொண்டது
நீ கும்பிட்டு வந்த கோவிலின் சாமி !
--
எல்லா விரல்களையும் விட
பூரிப்பாய் இருந்தது
நீ பிடித்து நடந்து வந்த
என் கை நடுவிரல் !
--
கோபத்தில்
செடியிலேயே சிவந்திருக்கும்
நீ பறிக்காமல் விட்ட மருதாணி இலைகள் !

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment