Wednesday, September 26, 2012

நெற்றிப்பொட்டு !

 இருளைக் கண்டு நீ அச்சப்படுவாயோ?
என்று எண்ணித் தான்
உன் நெற்றிப்பொட்டை எடுத்து
வானில் ஒட்டி வைத்து
அவைகளுக்கு பெயர் வைத்தேன்
நிலவென்றும், நட்சத்திரங்கள் என்றும்...!

--விஜய் ஆனந்த்

முத்தம் !

பெண்ணே ! நீ எனக்குக் கொடுக்கும்
முத்தங்களில் ஒன்றாவது தவறி
தன்னுள் விழாதா என்கிற
ஏக்கத்துடன் வந்து வந்து
திரும்புகின்றன கடல் அலைகள்...!

--விஜய் ஆனந்த்

Thursday, September 20, 2012

கிறுக்கல்கள் !

நீ நிலவா?
இல்லை
நிலவு நீயா?
--
உன்னைப் பார்த்து
வெட்கம் தாளாமல்
தன்னை மேகத்துக்குள்
மறைத்துக்  கொண்டாதோ நிலவு ?
--
தேன் குழைத்துச் செய்த
தங்கச் சிலையோ நீ?
--
கிளி வந்து
கொத்திச் செல்லும்
அத்திப் பழமோ
உன் இதழ்கள் !

--விஜய் ஆனந்த்