Thursday, June 27, 2013

போதைப் பெண்ணே !

சுண்ணாம்பு கலக்காத
பதநீரு ஓஎச்சி ...
சுர்ரென்னு ஏறுதடி
அதப்பார்த்தா ஏஉச்சி ...

உதடோடு உதடுவச்சு
உயிர்சூட்ட குறைக்கவா ...
ஓஉடம்ப ஏஉடம்பு
வியர்வைக்குள்ளே மறைக்கவா ..?

கருவேலம் பசைபோல
கட்டிநாம ஒட்டிக்கணும் ...
கட்டிலறை போர்க்களத்தில்
தோல்விக்காக முட்டிக்கணும் ...

ஓகூந்தல் உள்ளுக்குள்
நாபோயி சிக்கிக்கணும் ...
தண்டுவடம் வீணையாகும்
அளவுநாம கட்டிக்கணும் ...

ஓகூந்தல் ஏறினால்
மகிழம்பூ வாசமிழக்கும் ...
ஓவாசம் வீசினால்
பொணம்கூட சுவாசமிழுக்கும் ...

கருமையான வானவில்
கண்ணேஉன் புருவமடி ...
எழிலேநீ இயற்கையின்
ஏழாவது பருவமடி ...

No comments:

Post a Comment