Wednesday, January 9, 2013

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை !


உன்னை மறக்க நினைத்து 
தினம் தினம் 
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் 
இன்றாவது மறந்து விடுவேனா என்று !

கண்ணீரில் உன் நினைவுகளை 
கரைத்துவிடலாம் என்றெண்ணி 
தினம் தினம் அழுகிறேன் 
என் கண்ணீர் நின்றபாடில்லை !

இருந்தும் மறக்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கிறேன் ! என்ன செய்ய ! அசையும் ஒவ்வொரு அணுவிலும் தான் உன்முகம் அலைபாய்கிறதே !!

எந்த குழந்தை சிரித்தாலும் என்னவள் குழந்தை சிரிப்பு ஞாபகம் ! 
எந்தப் பூ விரிந்தாலும் என்னவள் புன்னகைப் பூ ஞாபகம் !
என் அன்னைமடி சாய்கையில் என்னவள் ஸ்பரிசம் ஞாபகம் !
பச்சைக் கிளிகள் பார்க்கையில் என்னவள் கொஞ்சல் மொழிகள் ஞாபகம் !
வெள்ளை மேகம் காண்கையில் என்னவள் வெண்மேனி ஞாபகம் ! 
நிலவு மிதக்கப் பார்க்கையில் என்னவள் உறக்கம் கொண்ட ஞாபகம் !
ரோஜா இதழ் பார்க்கையில் என்னவள் இதழ் சுவைத்த ஞாபகம் !
மயில் இறகு வருடுகையில் என்னவள் மேனி தீண்டிய  ஞாபகம் !

இறைவா ! என்னவளுடன் நான் சேர வழி இல்லையானாலும் அவள் நினைவுகளுடனாவது வாழ வழி கொடு !

No comments:

Post a Comment