Tuesday, May 31, 2011

தாய் வாசம் ...!

உச்சி முகர்ந்து
கன்னம் தடவி
தலை கோதி
நெற்றியில் முத்தமிடுகையில்
உன்னில் உணர்கிறேன்
- என் தாயின் வாசம்..............................!

--விஜய் ஆனந்த் 

Wednesday, May 25, 2011

வண்ணத்துப்பூச்சிக்கு பிறந்த நாள்

என் வாழ்க்கையே
உன் நினைவுகளுடன் தான்
என்றாகிவிட்ட போது
நீ தொலை தூரத்தில் இருந்தால் என்ன ?
தொடும் தூரத்தில் இருந்தால் என்ன ..?...பெண்ணே..!
--
என் இனிய  வண்ணத்துப்பூச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.....
--
நினைவுகளுடன்..
விஜய் ஆனந்த்

Tuesday, May 3, 2011

உன்னுள் நான் என்னுள் நீ...!

நீயும் நானும்
இதழ் சேர்த்த போதே
என் உயிர் உன்னுள்ளும்
உன் உயிர் என்னுள்ளும்
ஊற்றப்பட்டு விட்டதே கண்மணி..

உன் உயிர்க் காற்று
என் சுவாசத்துடன்
கலந்த பொழுது
எழுந்த வெப்பக் கதகதப்பில்
நம் காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது கண்மணி ..

உன் விரல்கள்
என் விரல் கோர்த்த நேரத்தில்
தாயின் தொப்புள் கொடி உறவு
நமக்குள் பிணைக்கப் பட்டு விட்டது கண்மணி..

உன் கண்கள் வழியே
என்னைப் பார்த்த நொடியில்
என் உயிர்
மோட்சம் அடைந்து விட்டது கண்மணி..

-- விஜய் ஆனந்த்

Sunday, May 1, 2011

என்னடி சொல்வேன், என் இதயத்திடம்?

கண்களிடம் சொல்லிவிட்டேன்
உன் அழகிய முகம்
இனி தெரியாது என்று..

கைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் ஸ்பரிசம்
இனி கிடைக்காது என்று..

கால்களிடம் சொல்லிவிட்டேன்,
உன்னிடம் நோக்கி
இனி பயணமில்லை என்று..

காதுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் இனிய குரல்
இனி கேட்காது என்று..

தோள்களிடம் சொல்லிவிட்டேன்,
உன் தலை தாங்க
இனி இயலாது என்று..

வார்த்தைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் மீது கவிதைகள்
இனி வேண்டாம் என்று..

சாலைகளிடம் சொல்லிவிட்டேன்,
நாம் சேர்ந்திருக்கும் நேரங்கள்
இனி இல்லை என்று..

உணர்வுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் அன்பும்
இனி மலராது என்று..

எத்தனை சொல்லியும்
உன்னை நோக்கியே சாய்கிறதே -

என்னடி சொல்வேன், என் இதயத்திடம்?

-- விஜய் ஆனந்த்