நீயும் நானும்
இதழ் சேர்த்த போதே
என் உயிர் உன்னுள்ளும்
உன் உயிர் என்னுள்ளும்
ஊற்றப்பட்டு விட்டதே கண்மணி..
உன் உயிர்க் காற்று
என் சுவாசத்துடன்
கலந்த பொழுது
எழுந்த வெப்பக் கதகதப்பில்
நம் காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது கண்மணி ..
உன் விரல்கள்
என் விரல் கோர்த்த நேரத்தில்
தாயின் தொப்புள் கொடி உறவு
நமக்குள் பிணைக்கப் பட்டு விட்டது கண்மணி..
உன் கண்கள் வழியே
என்னைப் பார்த்த நொடியில்
என் உயிர்
மோட்சம் அடைந்து விட்டது கண்மணி..
இதழ் சேர்த்த போதே
என் உயிர் உன்னுள்ளும்
உன் உயிர் என்னுள்ளும்
ஊற்றப்பட்டு விட்டதே கண்மணி..
உன் உயிர்க் காற்று
என் சுவாசத்துடன்
கலந்த பொழுது
எழுந்த வெப்பக் கதகதப்பில்
நம் காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது கண்மணி ..
உன் விரல்கள்
என் விரல் கோர்த்த நேரத்தில்
தாயின் தொப்புள் கொடி உறவு
நமக்குள் பிணைக்கப் பட்டு விட்டது கண்மணி..
உன் கண்கள் வழியே
என்னைப் பார்த்த நொடியில்
என் உயிர்
மோட்சம் அடைந்து விட்டது கண்மணி..
-- விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment