கண்களிடம் சொல்லிவிட்டேன்
உன் அழகிய முகம்
இனி தெரியாது என்று..
கைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் ஸ்பரிசம்
இனி கிடைக்காது என்று..
கால்களிடம் சொல்லிவிட்டேன்,
உன்னிடம் நோக்கி
இனி பயணமில்லை என்று..
காதுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் இனிய குரல்
இனி கேட்காது என்று..
தோள்களிடம் சொல்லிவிட்டேன்,
உன் தலை தாங்க
இனி இயலாது என்று..
வார்த்தைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் மீது கவிதைகள்
இனி வேண்டாம் என்று..
சாலைகளிடம் சொல்லிவிட்டேன்,
நாம் சேர்ந்திருக்கும் நேரங்கள்
இனி இல்லை என்று..
உணர்வுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் அன்பும்
இனி மலராது என்று..
எத்தனை சொல்லியும்
உன்னை நோக்கியே சாய்கிறதே -
உன் அழகிய முகம்
இனி தெரியாது என்று..
கைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் ஸ்பரிசம்
இனி கிடைக்காது என்று..
கால்களிடம் சொல்லிவிட்டேன்,
உன்னிடம் நோக்கி
இனி பயணமில்லை என்று..
காதுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் இனிய குரல்
இனி கேட்காது என்று..
தோள்களிடம் சொல்லிவிட்டேன்,
உன் தலை தாங்க
இனி இயலாது என்று..
வார்த்தைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் மீது கவிதைகள்
இனி வேண்டாம் என்று..
சாலைகளிடம் சொல்லிவிட்டேன்,
நாம் சேர்ந்திருக்கும் நேரங்கள்
இனி இல்லை என்று..
உணர்வுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் அன்பும்
இனி மலராது என்று..
எத்தனை சொல்லியும்
உன்னை நோக்கியே சாய்கிறதே -
என்னடி சொல்வேன், என் இதயத்திடம்?
-- விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment