Friday, June 24, 2011

முத்தம் !


உள்ளங்கை குவித்து
இதழ் பதித்து
முத்தங்களை
காற்றில் பறக்க விடுகிறாய் !
வானெங்கும்  வண்ணத்துப்பூச்சிகள்...!

--விஜய் ஆனந்த்

Monday, June 13, 2011

பெண்ணல்ல பெண்ணல்ல....!






பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ


சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

--

தென்றலை போல நடபவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி


அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
--
சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
 

உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ


-- விஜய் ஆனந்த்

Friday, June 10, 2011

உன் மடியில் !

நான்
இறக்கும் நேரத்தில்
உன் மடியில் ஓர்
இடம் தருவாயா கண்ணே..?

சொர்க்கத்தில்
தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும் !

--விஜய் ஆனந்த்

Thursday, June 9, 2011

வெண்ணிலவே ! வெண்ணிலவே !


வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
என் மார்பில் நீ தூங்கும்
பொன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே
உயிரே உயிர் நீ இல்லாமல்..
உயிரில் உயிரும் இல்லையடி..
உன்னால் உன்னால் உன்னாலே..
உள்ளம் உடைந்தேன் உண்மையடி..
உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்

வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே..
எங்கே நீ.. எங்கே நீ..
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே..
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே..
அல்லும் பகலும் உன்னை காண
உயிரை நானும் சுமந்தேனே..
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்
அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழ்கிறேன்.
-- விஜய் ஆனந்த்

Wednesday, June 8, 2011

சட்டென நின்றது மழை !

வருத்தப் பட்டுக்கொண்டது
உன் வீட்டுக் காலண்டர்
பிறந்திருந்தால் உன்
பிறந்தநாளாய்
பிறந்திருக்க வேண்டும் என !


பலாச்சுளை காய்த்தது
நீ குளித்த
நீரைக் குடித்து
வளர்ந்த வேப்ப மரத்தில் !

பட்டுத் துணியாய் மாறியது
நீ துவட்டி விட்டு
கொடியில் காயப்போட்ட
உன் துண்டு !

என்னையே மறுபடியும்
உடுத்திக் கொள் என்று
கதறி அழுதது நேற்று
நீ கழட்டி போட்ட ஆடை !

கண்ணாடியில் உன் முகம்
பார்த்தாய் !
அழகானது கண்ணாடி !

உன்
முகப் பொலிவில் தன்னை
மெருகேற்றிக் கொண்டது
நீ அணிந்திருந்த
வைர மூக்குத்தி !

நீ
தலை கோதிவிட்டு வைத்த
சீப்பின் பற்களில்
முளைத்தது ரோஜாப் பூ !

உன்
உதட்டின் சிவப்பில்
சாயம் பூசிக் கொண்டது
நீ பூசும்
உதட்டுச் சாயம் !

உன்
மூச்சுக் காற்றில்
தன்னை மனம் கூட்டிக் கொண்டது
நீ சூடிய
மல்லிகைப் பூ !

உன்னை போலவே
சிரித்தது
நீ அணிந்த
கண்ணாடி வளையல் !

பல்லக்காய் மாறிப்போனது
உன் காலணிகள்
உன் பூப் பாதம்  பட்டவுடன் !

வீட்டை விட்டு
வெளியில் வந்தாய் நீ !

சூரியனும்
கதிர்களை சுருக்கிக் கொண்டான்
உன்னை பார்த்ததும்
வெட்கத்தில் !

வானம் இருண்டது !
மேகங்கள் சூழ்ந்தன !
வானமகள் துள்ளினாள்
ஆனந்தத்தில் !
மழை பொழிந்தாள் பூரிப்பில் !

குடை விரித்தாய் நீ !
சட்டென நின்றது மழை !

உன்னை
தீண்ட வந்த மழைத் துளிகளுக்கு
ஏமாற்றம் !

இருள் வந்தது !
நிலா மகள்
குளிர்ந்தாள் பரவசத்தில் !

குளிர்காற்று தென்றலாய் வீசியது !
உன்னைத் தீண்டி விளையாடியது !

"அதோ விண்மீன்கள்" என்று
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கை நீட்டி காட்டி விட்டு
தூங்கச்சென்றாய் !

உன் முகம்
பார்த்த சந்தோசத்தில்
இரவு முழுவதும்
மின்னிக்கொண்டிருந்தன
விண்மீன்கள் !

-- விஜய் ஆனந்த்

Friday, June 3, 2011

"இவள் என் தேவதை....!"

"இந்த ரோஜாக்கள் எல்லாம்
எவ்வளவு அழகாய் இருக்கிறது"
என்று வியந்த
உன்னைப் பார்த்து
தோட்டத்தில் இருந்த
ரோஜாக்கள் வியந்தன
"எப்படி இந்த ரோஜாப் பூ
மட்டும் இவ்வளவு
அழகாய் இருக்கிறது......! "

வண்ணத்துப்பூச்சி உன்னைக்
காட்டி என்னிடம்
கேட்டது
"ஏன் இந்தப் பூ மட்டும்
நகர்ந்து கொண்டே இருக்கிறது....!"

"அவள் கூந்தலைப் போல்
எங்களுக்கும் இறகுகள்
வேண்டும்" என
மயில்கள் உன்னைக் காட்டி
இறைவனிடம் முறையிட்டுக் கொண்டன....!

"அவள் நடை போல், என் நடை
அழகாய் இல்லை " என்று
அன்னப்பறவை அங்கலாய்த்துக் கொண்டது .....!

தாமரைப் பூ
தன்னிலை மறந்தது
உன் சக்கரைச் சிரிப்பில்.............!

தென்றலும் உன்னை தீண்டி
தன் ஆசை தீர்த்துக் கொண்டது
உன் கை அசைப்பில்.....!

புறாக்களும்
வெட்கப் பட்டன
உன் அழகின் இயல்பில்....!

மல்லிகையும்
மனம் லயித்தது
உன் சந்தன மனத்தில்.....!

கிளிகளும்
வாய் மூடிக் கொண்டன
உன் கொஞ்சல் மொழியில்.....!

அருவிகள்
ஆர்ப்பரித்தன உன் வருகையில்....!

உன் பல்லக்கைச் சுமந்த
என்னிடம் கேட்டன
"யார் இவள்?"

உரக்கச் சொன்னேன் "இவள்.........என் தேவதை........................!"

--விஜய் ஆனந்த்