Friday, June 3, 2011

"இவள் என் தேவதை....!"

"இந்த ரோஜாக்கள் எல்லாம்
எவ்வளவு அழகாய் இருக்கிறது"
என்று வியந்த
உன்னைப் பார்த்து
தோட்டத்தில் இருந்த
ரோஜாக்கள் வியந்தன
"எப்படி இந்த ரோஜாப் பூ
மட்டும் இவ்வளவு
அழகாய் இருக்கிறது......! "

வண்ணத்துப்பூச்சி உன்னைக்
காட்டி என்னிடம்
கேட்டது
"ஏன் இந்தப் பூ மட்டும்
நகர்ந்து கொண்டே இருக்கிறது....!"

"அவள் கூந்தலைப் போல்
எங்களுக்கும் இறகுகள்
வேண்டும்" என
மயில்கள் உன்னைக் காட்டி
இறைவனிடம் முறையிட்டுக் கொண்டன....!

"அவள் நடை போல், என் நடை
அழகாய் இல்லை " என்று
அன்னப்பறவை அங்கலாய்த்துக் கொண்டது .....!

தாமரைப் பூ
தன்னிலை மறந்தது
உன் சக்கரைச் சிரிப்பில்.............!

தென்றலும் உன்னை தீண்டி
தன் ஆசை தீர்த்துக் கொண்டது
உன் கை அசைப்பில்.....!

புறாக்களும்
வெட்கப் பட்டன
உன் அழகின் இயல்பில்....!

மல்லிகையும்
மனம் லயித்தது
உன் சந்தன மனத்தில்.....!

கிளிகளும்
வாய் மூடிக் கொண்டன
உன் கொஞ்சல் மொழியில்.....!

அருவிகள்
ஆர்ப்பரித்தன உன் வருகையில்....!

உன் பல்லக்கைச் சுமந்த
என்னிடம் கேட்டன
"யார் இவள்?"

உரக்கச் சொன்னேன் "இவள்.........என் தேவதை........................!"

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment