Tuesday, January 24, 2012

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று !




எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
***
கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா !
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா !
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா !
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே அதுவா !
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
***
முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா !
சங்கு கழுத்தை பாசிமணிகள் தடவுகின்றதே அதுவா !
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய் அதுவா !
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய் அதுவா !
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
***

கிறுக்கல்கள்



உன்னைப் பற்றி
பாடித்தான்
கவிதைகளும் கவிதையானதோ ?
***
ஓவியமாக
வரைந்து வைத்தேன் உன்னை !
அழகாக மாறியிருந்தது 
தூரிகை !
***
சிணுங்கினாய்  நீ !
பாட்டுக்கச்சேரி என நினைத்து
பாடத் தொடங்கியது 
குயில் கூட்டம் !
***
புன்னகைத்தாய் நீ !
வெட்கப்பட்டது  இசைத்தமிழ் !
***
நீ
முகம் கழுவிய நீரைக் கொண்டு
 அழகாகிக் கொண்டது
உன் தோட்டத்து ரோஜாச் செடி !
***

--விஜய் ஆனந்த் 


Monday, January 23, 2012

கிறுக்கல்கள்

சாணந் தெளித்து கோலமிட்டு
புதுக் கரும்பு படைத்து
அரிசி புடைத்து வண்ணப் 
பானையில் பொங்கல் வைத்தேன் !
வீட்டின் முற்றத்தில் இருந்து 
எட்டிப் பார்த்தாய் நீ !
பொங்கல் பானை கத்தியது 
"பொங்கலோ பொங்கல்" !
***
குழந்தையும் நீயும் 
ஒன்றாம்  !
கர்வப்பட்டன குழந்தைகள் !
***
உன்னைக் கடித்த
கொசு 
தேனீயாக மாறியிருந்தது !
***

--விஜய் ஆனந்த்