Tuesday, July 31, 2012
Monday, July 23, 2012
பேரழகு !
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா !
--
ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் !
ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் !
நீ கால் முளைத்த புஷ்பம் !
கடல் நுரையில் செய்த சிற்பம் !
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம் !
--
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !
—
வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும்
உன்னை போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே !
கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே !
ஓ… அழகே நீ வாய் பேச
கீதம் என்றேனே சங்கீதம் என்றேனே !
பேசாத மௌனத்தை கவிதை என்பேனே !
புது கவிதை என்பேனே !
கடல் ஓரம் நீயும் வந்தால்
புயல் வந்ததென்று அர்த்தம் !
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம் !
—
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !
—
உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐநூறு காப்பியங்கள் உண்டாகும் !
உந்தன் கூந்தல் ஈரத்தை தொட்டு போன காற்றை தான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும் !
ஓ… அன்பே உன் இதழை தான் சிறைகள் என்பேனே !
கனி சிறைகள் என்பேனே !
மெலிதான இடையை தான் பிறைகள் என்பேனே !
தேய் பிறைகள் என்பேனே !
அடி அன்னபறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன் !
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன் !
—
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா !
--
ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் !
ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் !
நீ கால் முளைத்த புஷ்பம் !
கடல் நுரையில் செய்த சிற்பம் !
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம் !
--
Tuesday, July 17, 2012
போ நீ போ !
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா..?
இருளிலே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா..?
--
என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ !
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ !
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ !
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ !
Thursday, July 12, 2012
மழையாய் வந்தாளே !
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
--
பார்த்தால் பார்க்க தோன்றும் !
பேரை கேக்க தோன்றும் !
பூ போல் சிரிக்கும் போது
காற்றாய் பறந்திட தோன்றும் !
--
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
--
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
--
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ ?
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ ?
--
நெற்றி மேலே ஓற்றை முடி ஆடும் போது
நெஞ்சுகுள்ள மின்னல் பூக்கும் ! பார்வை ஆளை தூக்கும் !!
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்டத்தூண்டும் !
பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசாய் மாறத்தோன்றும் !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
--
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ! தோள்களில் சாயுவேன் !
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் ! நெஞ்சிலே தாங்குவேன் !!
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள் !
காயம் இன்றி வெட்டி போட்டாள் !!
உயிரை ஏதோ செய்தாள் !
மவுனமாக உள்ளுக்குள்ளே பேசும் போதும்
அங்கே வந்து ஒட்டுக் கேட்டாள் !
கனவில் கூச்சல் போட்டாள் !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே…!!!
Thursday, July 5, 2012
Wednesday, July 4, 2012
Tuesday, July 3, 2012
Subscribe to:
Posts (Atom)