துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
--
பார்த்தால் பார்க்க தோன்றும் !
பேரை கேக்க தோன்றும் !
பூ போல் சிரிக்கும் போது
காற்றாய் பறந்திட தோன்றும் !
--
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
--
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
--
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ ?
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ ?
--
நெற்றி மேலே ஓற்றை முடி ஆடும் போது
நெஞ்சுகுள்ள மின்னல் பூக்கும் ! பார்வை ஆளை தூக்கும் !!
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்டத்தூண்டும் !
பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசாய் மாறத்தோன்றும் !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
--
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ! தோள்களில் சாயுவேன் !
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் ! நெஞ்சிலே தாங்குவேன் !!
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள் !
காயம் இன்றி வெட்டி போட்டாள் !!
உயிரை ஏதோ செய்தாள் !
மவுனமாக உள்ளுக்குள்ளே பேசும் போதும்
அங்கே வந்து ஒட்டுக் கேட்டாள் !
கனவில் கூச்சல் போட்டாள் !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே…!!!
No comments:
Post a Comment