Thursday, April 19, 2012

படித்ததில் பிடித்தது !


நீ கோலமிட வரும்
காலம் பார்த்து காத்திருந்து
உன்னை காதலிக்க
ஒளியெனும் தூது விட்டு
கதிரவன் கண் சிமிட்ட!
உன் கொலுசின் ஒலிக்கேட்டு
மோகினி பிசாசு வருகிறதென்று
பொய்சொல்லி
தன் நட்சத்திர தோழிகளை
கூட்டிக்கொண்டு ஓடி ஒளிகிறது
பொறாமைப்பிடித்த நிலவு!
உன் வரவை எதிர்ப்பார்த்து
பேரழகி வருகிறாள்
அவள் கூந்தலில்
நான் குடியேறப்போகிறேன்
என பெருமைப்பொங்கி
நறுமணம் கமழ்ந்து
புன்னகை பூக்கிறது பூக்கள்!
உன்னுடலில் ஒட்டிக்கொள்ள
ஆசைக்கொண்டு
உயிர் துறந்த கூட்டுப் புழுக்களின்
கூட்டு முயற்சியில்
பட்டுப்பாவாடையில் பவனி வருகிறாய் நீ!
இந்த மண் உனக்கு
தன் மடி மீதில்
பச்சைக்கம்பளம் விரித்து
தாலாட்டக் காத்திருக்கிறது!
இவை அனைத்திற்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நீ எனைக் கானவே வருகிறாய் என்பது!
உன்னருகில் நான் வந்து
கட்டியணைத்து கவிபாட
மதிய சூரியன்
என்மேல் அனல் கக்கி உமிழ்கிறான்
ஆதங்கம் கொண்டு
நம்மைப் பிரித்திடவே !
நாம் மீண்டும்
பிரியாமல் பிணைந்திடவே
மாலை நேரம் வரை
காத்திருந்து பார்த்து பார்த்து
கண்கள் மங்கி
ஒளி இழந்து ஓடி ஒளிகிறான்
மாலை நேரத்து ஆதவன்!
போட்டிக்கு பேரழகி வந்தாளென்று
ஓடி ஒளிந்த நிலவு-இரவில்
பொலிவாகி வெளி வருகிறது
அவளிடத்தில் காதல் கொண்ட
நம் ஆதவன்
கடுப்பாகி மீண்டும் நம்மிடத்தில்
சரணாகதி ஆனானென்று சந்தோசத்தில்!
பூக்கள் வாடின
புன்னகை பூத்து வந்தோமே
பூவை இவள் கூந்தல் சேர
நம்மை விட்டு இவள்
அவனிடத்தில் புன்னகைக்கிறாளே என்று!
உன்னை தொட்டு தழுவிய
என்னைக் கண்டு
கூட்டுப் புழுக்களும்
கசங்கி கதறி அழுதன
இவளுக்காய் உயிர் இழந்தோம்
இவள் அவனுக்காய் உயிர் வாழ்கிறாளே என்று!
பூமி விரித்த பச்சைக் கம்பளம் கூட
பட்டுப்போய் காட்சியளிக்கிறது!
என்னவளே
என் முகத்தைமட்டும் பசுமையாக்கி
எல்லோர் முகத்தையும்
வறட்சியாக்கி விட்டாய் நீ!
நீ என் அருகாமை எப்பொழுதும்
வேண்டுமென்று
உன்னை முப்பொழுதும் நினைக்கிறது என் உள்ளம்!

உன் பிஞ்சுமுகம் பார்க்கும் போது !


உன் பிஞ்சுமுகம்  பார்க்கும்  போது
இந்த வாழ்வின் மீதோர்
பற்றுதல் வளர்கிறது!
உன்னை பார்த்த நொடியில்
பறந்து போகிறது
என்னை பற்றியிருக்கும் பாரங்கள்!
என் செல்லமே..
எங்கிருந்து எடுத்து வந்தாயோ
எமை மாற்றும் மந்திரத்தை!

--விஜய் ஆனந்த் 

Thursday, April 12, 2012

கிறுக்கல்கள் !


தற்கொலை 
செய்து கொள்ளும் 
நீ பிடிக்காத வண்ணத்துப்பூச்சிகள் !
-
சற்று நேரத்தில்
வெளிறிப் போகும் 
நீ பார்க்காத வான்வவில் !
-
நீ 
கடந்து சென்ற பின்
மரங்களுக்கெல்லாம்
"பூவுதிர் காலம்"
-
பேனா மூடியை
திறக்கும் போதெல்லாம்
கவிதைகளாகிறாய் நீ !
-
உருக மறந்து 
உன்னை பார்த்து 
உறைந்து  கிடக்கிறது 
நீ ஏற்றிய மெழுகுவர்த்தி !
-

-- விஜய் ஆனந்த்

என் கனவில் நீ !



கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!

மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,

இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,

தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!

--விஜய் ஆனந்த்

என் தேவதை அவள் !



 உன்னதமானவள், சிறந்தவள்,
ஒப்பற்ற்வள்
தூயவள், என் தாயவள் !
-
வசீகரிப்பவள், வசப்படுத்தியவள்
வசந்தமானவள் 
எனக்குச் சொந்தமானவள் !
-
தேவதையானவள், பூ அவள் 
பூந்தேர் அவள் 
என் புன்னகை அவள் !
-
மணமுடையவள், நல்ல
குணமுடையவள், என்
குழந்தையவள் !
-
அழகானவள், வனப்புள்ளவள்
கவர்ச்சியானவள், இதமானவள்
எழிலானவள், இனியவள்
என் உள்ளங் கவர்ந்தவள் !
-
மயக்குபவள், மந்திரக்காரி இவள்
பிரகாசமானவள்
மிருதுவானவள் , மல்லிகைப் பூ இவள் !
-
நளினமானவள், நற்பன்புள்ளவள்
நயமானவள்
நேர்த்தியானவள், நிகரற்றவள்
மேலானவள், மென்மையானவள் 
என் மனைவி அவள் !

-- விஜய் ஆனந்த் 

Wednesday, April 4, 2012

ஆரிரோ ஆரிரோ !

~~என்னவள் எனக்கு பிறந்த முகல் மகள் .....என்னை ஒரு தகப்பனாய் பாவித்து என் செல்ல மகளுக்காக நான் பாடும் பாடல் ...இது என் குழந்தை கார்த்திகா-விற்கு சமர்ப்பணம்...!~~






ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !


தாயக தந்தை மாறும் புது காவியம் !
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் !


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு 
ஓருயிர் ஆகுதே !
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே !

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..!

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே !
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே !
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே !
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே !
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே !


இரு மனம் ஒன்று 
சேர்ந்து  இங்கே மௌனத்தில் பேசுதே !
ஒரு நொடி போதும் போதும் என்று குரல் கேட்குதே !
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே !

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் !
கேட்காத ஓர் பாடல் அதில் இசை 
மீட்டினாள் !


அடடா ! தெய்வம் இங்கே வரமானதே !
அழகாய் வீட்டில் விளையாடுதே !
அன்பின் விதை இங்கே மரமானதே !
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே !
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே !
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே !

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
  !

Tuesday, April 3, 2012

வா வா என் தேவதையே !

~~என்னவள் எனக்கு பிறந்த முகல் மகள் .....என்னை ஒரு தகப்பனாய் பாவித்து என் மகளுக்காக நான் பாடும் பாடல் ...இது என் குழந்தை கார்த்திகா-விற்கு சமர்ப்பணம்...!~~




வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…!
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை!
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை!
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை!
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை!
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்!
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்!
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்!
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மீசையில்லாத மகன்  என்று சொன்னேன்!
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…!

ஆசை !





எனக்கு 
உன் மேல் உள்ள அன்பை
காதல் என்ற ஒற்றைச்சொல்லில் 
அடக்கிவிட முடியாது..!

அது தாயின் பாசம் !
தந்தையின் உவகை !
அண்ணனின் அரவணைப்பு !

உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆசையில்லை !
உனக்கு இந்த உலகத்தை சுற்றிக் காட்ட ஆசை !

உன்னுடன் பேச  ஆசையில்லை !
உன் மழலை மொழி கேட்க ஆசை !

நான் உன் மடி சாய்ந்து 
நீ என் தலை கோதி விளையாட ஆசை !
நீ என் மார்பில் உறங்க ஆசை !
உன்னை என் கையில் ஏந்த ஆசை !
உன் பிஞ்சு விரல் பிடித்து நடக்க ஆசை !
உன் தோல் சாய்ந்து அழ ஆசை !
உன் மடியில் உறங்க ஆசை !

உன்னுடன் நிலவை ரசிக்க ஆசை !
உனக்கு நிலாச்சோறு ஊட்ட ஆசை !

உனக்கு மகனாக மாற ஆசை !
நீ எனக்கு மகளாக மாற ஆசை !
உன் கால் கொலுசை மாட்டிவிட ஆசை !
உன் பிஞ்சு பற்கள் என் கன்னம் தீண்ட ஆசை !

நான் உறங்க நீ ரசிக்க ஆசை !
நீ உறங்க நான் ரசிக்க ஆசை !

என் உள்ளம் பகிர ஆசை !
உன் உள்ளத்தில் வசிக்க ஆசை !
உன்னையே சுவாசிக்க ஆசை !
நீ என்னை நேசிக்க ஆசை !

உன்னுடன் உலகம் ரசிக்க ஆசை !
உன்னையே என் உலகமாக்கி ரசிக்க ஆசை !

கட்டிலில் ஒன்றுகூடி 
காதலை பெற்றெடுக்க ஆசை !
காதலின் கைபிடித்து நடக்க ஆசை !

நரை கூடிக் கிழமான போது
உன் மடியில் 
என் உயிர்  பிரிய  ஆசை !

--விஜய் ஆனந்த்