Thursday, April 12, 2012

என் கனவில் நீ !



கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!

மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,

இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,

தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!

--விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment