தற்கொலை
செய்து கொள்ளும்
நீ பிடிக்காத வண்ணத்துப்பூச்சிகள் !
-
சற்று நேரத்தில்
வெளிறிப் போகும்
நீ பார்க்காத வான்வவில் !
-
நீ
கடந்து சென்ற பின்
மரங்களுக்கெல்லாம்
"பூவுதிர் காலம்"
-
பேனா மூடியை
திறக்கும் போதெல்லாம்
கவிதைகளாகிறாய் நீ !
-
உருக மறந்து
உன்னை பார்த்து
உறைந்து கிடக்கிறது
நீ ஏற்றிய மெழுகுவர்த்தி !
-
-- விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment