Thursday, April 12, 2012

கிறுக்கல்கள் !


தற்கொலை 
செய்து கொள்ளும் 
நீ பிடிக்காத வண்ணத்துப்பூச்சிகள் !
-
சற்று நேரத்தில்
வெளிறிப் போகும் 
நீ பார்க்காத வான்வவில் !
-
நீ 
கடந்து சென்ற பின்
மரங்களுக்கெல்லாம்
"பூவுதிர் காலம்"
-
பேனா மூடியை
திறக்கும் போதெல்லாம்
கவிதைகளாகிறாய் நீ !
-
உருக மறந்து 
உன்னை பார்த்து 
உறைந்து  கிடக்கிறது 
நீ ஏற்றிய மெழுகுவர்த்தி !
-

-- விஜய் ஆனந்த்

No comments:

Post a Comment