எனக்கு
உன் மேல் உள்ள அன்பை
காதல் என்ற ஒற்றைச்சொல்லில்
அடக்கிவிட முடியாது..!
அது தாயின் பாசம் !
தந்தையின் உவகை !
அண்ணனின் அரவணைப்பு !
உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆசையில்லை !
உனக்கு இந்த உலகத்தை சுற்றிக் காட்ட ஆசை !
உன்னுடன் பேச ஆசையில்லை !
உன் மழலை மொழி கேட்க ஆசை !
நான் உன் மடி சாய்ந்து
நீ என் தலை கோதி விளையாட ஆசை !
நீ என் மார்பில் உறங்க ஆசை !
உன்னை என் கையில் ஏந்த ஆசை !
உன் பிஞ்சு விரல் பிடித்து நடக்க ஆசை !
உன் தோல் சாய்ந்து அழ ஆசை !
உன் மடியில் உறங்க ஆசை !
உன்னுடன் நிலவை ரசிக்க ஆசை !
உனக்கு நிலாச்சோறு ஊட்ட ஆசை !
உனக்கு மகனாக மாற ஆசை !
நீ எனக்கு மகளாக மாற ஆசை !
உன் கால் கொலுசை மாட்டிவிட ஆசை !
உன் பிஞ்சு பற்கள் என் கன்னம் தீண்ட ஆசை !
நான் உறங்க நீ ரசிக்க ஆசை !
நீ உறங்க நான் ரசிக்க ஆசை !
என் உள்ளம் பகிர ஆசை !
உன் உள்ளத்தில் வசிக்க ஆசை !
உன்னையே சுவாசிக்க ஆசை !
நீ என்னை நேசிக்க ஆசை !
உன்னுடன் உலகம் ரசிக்க ஆசை !
உன்னையே என் உலகமாக்கி ரசிக்க ஆசை !
கட்டிலில் ஒன்றுகூடி
காதலை பெற்றெடுக்க ஆசை !
காதலின் கைபிடித்து நடக்க ஆசை !
நரை கூடிக் கிழமான போது
உன் மடியில்
என் உயிர் பிரிய ஆசை !
--விஜய் ஆனந்த்
No comments:
Post a Comment