Wednesday, April 4, 2012

ஆரிரோ ஆரிரோ !

~~என்னவள் எனக்கு பிறந்த முகல் மகள் .....என்னை ஒரு தகப்பனாய் பாவித்து என் செல்ல மகளுக்காக நான் பாடும் பாடல் ...இது என் குழந்தை கார்த்திகா-விற்கு சமர்ப்பணம்...!~~






ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !


தாயக தந்தை மாறும் புது காவியம் !
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் !


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு 
ஓருயிர் ஆகுதே !
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே !

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..!

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே !
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே !
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே !
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே !
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே !


இரு மனம் ஒன்று 
சேர்ந்து  இங்கே மௌனத்தில் பேசுதே !
ஒரு நொடி போதும் போதும் என்று குரல் கேட்குதே !
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே !

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் !
கேட்காத ஓர் பாடல் அதில் இசை 
மீட்டினாள் !


அடடா ! தெய்வம் இங்கே வரமானதே !
அழகாய் வீட்டில் விளையாடுதே !
அன்பின் விதை இங்கே மரமானதே !
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே !
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே !
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே !

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
  !

No comments:

Post a Comment