Friday, December 9, 2011

தேவதை நீ !

நீயிறங்கிக் குளிக்கும்போது
நீர்த்தொட்டி -- பூந்தொட்டி
குளித்து விட்டு வெளியேறியதும்
பூந்தொட்டி -- தேன்தொட்டி
**
நீ
கவிதையாக்கப்பட வேண்டிய ஓவியமா?
ஓவியமாக்கப்பட வேண்டிய கவிதையா?
**
என்னை
வதைத்தே கொள்ளும்
தேவதை நீ !
**
என் இரவில்
நீ கனவு !
என் பகலில்
நீ நினைவு !
**
உன் உதட்டோரம் 
ஒட்டியிருக்கும் ஒரு 
சோற்றுப் பருக்கை போதும்
நான் பசியாற !
**
கொஞ்சி கொஞ்சி நீ
பேசும்போது தான் தெரிகிறது 
தமிழ் 
செம்மொழி என்று !
**
உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன் 
இடையில் வந்து போகிறது
பகல்,இரவு, பசி, தூக்கம் எல்லாம் !

-- விஜய் ஆனந்த் 

Wednesday, November 30, 2011

மழை !



 உன்னை அணைத்துக் கொள்ளும்
ஆசையில்  பிறந்தது
மழை !

மாலை நேர மழையில்
நனையாமல் இருக்க
மரத்தின் கீழே நின்று கொண்டாய் !

மண்ணில் விழுந்த எல்லாத் துளியும்
மரித்தது !
உன்மேல் விழுந்த எல்லாத் துளியும்
சிலிர்த்தது !

-- விஜய் ஆனந்த்

Wednesday, November 2, 2011

புகைப்படம்

மழையில் நனைந்த 
உன்
புகைப்படத்தில் இருந்து
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு !

--விஜய் ஆனந்த் 

Tuesday, October 18, 2011

தேன் பூச்சி !

ஒளிந்து கொள் பெண்ணே !
உன்னில் 
தேனெடுக்க வந்த தேனீ 
சர்க்கரை வியாதியில் 
செத்து விட்டதாம் !
தேன்பூச்சிக் கூட்டம் 
தேடிக் கொண்டிருக்கிறது உன்னை !

--விஜய் ஆனந்த்

Saturday, October 8, 2011

உறக்கம் !


வானவில் படுக்கை கட்டி
மேகப் போர்வை போர்த்தி 
மயில் தன் சிறகு  விரித்து
காற்று வீச 
முழு மதியாய் உறங்குகிறாள் 
என் தேவதை !

--விஜய் ஆனந்த் 

அழகியல் !

" பூக்கள் வாடிவிடும் "
சொல்கிறது அறிவியல் !
தினம் தினம் 
அறிவியலை பொய்யாக்குகிறது 
உன் அழகியல் !

--விஜய் ஆனந்த் 

Monday, October 3, 2011

மயிலிறகு !


மயிலிறகு சேகரிக்கும் 
உனக்குத் தெரியுமா...
காற்றில் உதிரும் 
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்துக் கொள்வது....!

--விஜய் ஆனந்த் 


மலர் முத்தம் !

உன் வீட்டு தோட்டத்து மலர்கள்
மலரவே இல்லை என குழம்பாதே !
அவை தான் இதழ் குவித்து
உன்னை முத்தமிட ஏங்குகின்றனவே !

--விஜய் ஆனந்த் 

Friday, August 19, 2011

அதிசயமே !

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே !
உலகில் ஏழல்ல அதிசயங்கள் 
வாய்பேசும் நீதான் எட்டாவது அதிசயமே !
வான் மிதக்கும் உன் கண்கள் 
தேன் தெறிக்கும் கன்னங்கள் 
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே !
இசை மீட்டும் சிறு விரல்கள்
கவி பேசும் கரு விழிகள் 
முத்துதிர்க்கும் பொன் இதழ்கள் அதிசயமே !
மலர் உதிர்க்கும் பாதங்கள்
படைக்கும் புது வேதங்கள்
உன் பேச்சில் வரும் கீதங்கள் அதிசயமே !
அசையும் வளைவுகள் அதிசயமே !

--விஜய் ஆனந்த் 

Friday, July 22, 2011

எங்கே சென்றாயோ ?

உன் உயிரும்
என் உயிரும்
என்னுள்ளே
பின்னிக் கிடந்ததடி !

உன் மனதும்
என் மனதும்
என்னுள்ளே
பேசிக் கொண்டதடி !

உன் உயிர் பிரித்தாய் !
உடன்
என் உயிரையும்
உருவிக் கொண்டாயடி !

நீ
இல்லாமல் நான்
எப்படி !
சிந்திப்பாயா தோழி !

எனக்கு
ஏன் இந்த வேதனை !
உள்ளம் வலிக்குதடி !
கண்கள் அழுகுதடி !

என்
வாழ்க்கை ஏங்குதடி !
தினம்
உன் மடி தேடி
அலையுதடி !

வாழ்க்கை கசக்குதடி !
உயிரில் நோகுதடி !

மீண்டும்
எனக்குள் வந்து விடடி !
மோட்சம்
எனக்கு தந்து விடடி தோழி !
--
" நீ இல்லாம ரொம்பவே வலிக்குதுடா தங்கம் ! சீக்கிரமே என்கிட்டே வந்துடு ! "

-- விஜய் ஆனந்த்

Wednesday, July 6, 2011

என்று காண்பேன்?

வகிடெடுத்து வாரிய கருங்கூந்தல்
காதோரம் தொட்டில் கட்டி ஆடும் கம்மல்
பின்னலுடன் பின்னி விளையாடும் மல்லிகை
மொழியின்றி கவிதை வரையும் கண்கள்
சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் இமைகள்
கருப்பு நிலவாய் இரு கருவிழிகள்
பார்த்தாலே தித்திக்கும் இதழ்கள்
இலவம்பஞ்சில் இழைத்த ஈரைந்து விரல்கள்
இறகினும் மெல்லிய பாதங்கள்
கவிதைகள் பேசிடும் புன்சிரிப்பு
காவியங்கள் காட்டிடாத உடலமைப்பு !
தேரோடும் நடையழகு !
மெல்லிய இடையழகு !

என்று காண்பேன் என் தேவதையை !

--விஜய் ஆனந்த்

Friday, June 24, 2011

முத்தம் !


உள்ளங்கை குவித்து
இதழ் பதித்து
முத்தங்களை
காற்றில் பறக்க விடுகிறாய் !
வானெங்கும்  வண்ணத்துப்பூச்சிகள்...!

--விஜய் ஆனந்த்

Monday, June 13, 2011

பெண்ணல்ல பெண்ணல்ல....!






பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ


சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

--

தென்றலை போல நடபவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி


அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
--
சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
 

உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ


-- விஜய் ஆனந்த்

Friday, June 10, 2011

உன் மடியில் !

நான்
இறக்கும் நேரத்தில்
உன் மடியில் ஓர்
இடம் தருவாயா கண்ணே..?

சொர்க்கத்தில்
தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும் !

--விஜய் ஆனந்த்

Thursday, June 9, 2011

வெண்ணிலவே ! வெண்ணிலவே !


வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
என் மார்பில் நீ தூங்கும்
பொன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே
உயிரே உயிர் நீ இல்லாமல்..
உயிரில் உயிரும் இல்லையடி..
உன்னால் உன்னால் உன்னாலே..
உள்ளம் உடைந்தேன் உண்மையடி..
உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்

வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே..
எங்கே நீ.. எங்கே நீ..
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே..
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே..
அல்லும் பகலும் உன்னை காண
உயிரை நானும் சுமந்தேனே..
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்
அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழ்கிறேன்.
-- விஜய் ஆனந்த்

Wednesday, June 8, 2011

சட்டென நின்றது மழை !

வருத்தப் பட்டுக்கொண்டது
உன் வீட்டுக் காலண்டர்
பிறந்திருந்தால் உன்
பிறந்தநாளாய்
பிறந்திருக்க வேண்டும் என !


பலாச்சுளை காய்த்தது
நீ குளித்த
நீரைக் குடித்து
வளர்ந்த வேப்ப மரத்தில் !

பட்டுத் துணியாய் மாறியது
நீ துவட்டி விட்டு
கொடியில் காயப்போட்ட
உன் துண்டு !

என்னையே மறுபடியும்
உடுத்திக் கொள் என்று
கதறி அழுதது நேற்று
நீ கழட்டி போட்ட ஆடை !

கண்ணாடியில் உன் முகம்
பார்த்தாய் !
அழகானது கண்ணாடி !

உன்
முகப் பொலிவில் தன்னை
மெருகேற்றிக் கொண்டது
நீ அணிந்திருந்த
வைர மூக்குத்தி !

நீ
தலை கோதிவிட்டு வைத்த
சீப்பின் பற்களில்
முளைத்தது ரோஜாப் பூ !

உன்
உதட்டின் சிவப்பில்
சாயம் பூசிக் கொண்டது
நீ பூசும்
உதட்டுச் சாயம் !

உன்
மூச்சுக் காற்றில்
தன்னை மனம் கூட்டிக் கொண்டது
நீ சூடிய
மல்லிகைப் பூ !

உன்னை போலவே
சிரித்தது
நீ அணிந்த
கண்ணாடி வளையல் !

பல்லக்காய் மாறிப்போனது
உன் காலணிகள்
உன் பூப் பாதம்  பட்டவுடன் !

வீட்டை விட்டு
வெளியில் வந்தாய் நீ !

சூரியனும்
கதிர்களை சுருக்கிக் கொண்டான்
உன்னை பார்த்ததும்
வெட்கத்தில் !

வானம் இருண்டது !
மேகங்கள் சூழ்ந்தன !
வானமகள் துள்ளினாள்
ஆனந்தத்தில் !
மழை பொழிந்தாள் பூரிப்பில் !

குடை விரித்தாய் நீ !
சட்டென நின்றது மழை !

உன்னை
தீண்ட வந்த மழைத் துளிகளுக்கு
ஏமாற்றம் !

இருள் வந்தது !
நிலா மகள்
குளிர்ந்தாள் பரவசத்தில் !

குளிர்காற்று தென்றலாய் வீசியது !
உன்னைத் தீண்டி விளையாடியது !

"அதோ விண்மீன்கள்" என்று
பக்கத்து வீட்டு குழந்தைக்கு
கை நீட்டி காட்டி விட்டு
தூங்கச்சென்றாய் !

உன் முகம்
பார்த்த சந்தோசத்தில்
இரவு முழுவதும்
மின்னிக்கொண்டிருந்தன
விண்மீன்கள் !

-- விஜய் ஆனந்த்

Friday, June 3, 2011

"இவள் என் தேவதை....!"

"இந்த ரோஜாக்கள் எல்லாம்
எவ்வளவு அழகாய் இருக்கிறது"
என்று வியந்த
உன்னைப் பார்த்து
தோட்டத்தில் இருந்த
ரோஜாக்கள் வியந்தன
"எப்படி இந்த ரோஜாப் பூ
மட்டும் இவ்வளவு
அழகாய் இருக்கிறது......! "

வண்ணத்துப்பூச்சி உன்னைக்
காட்டி என்னிடம்
கேட்டது
"ஏன் இந்தப் பூ மட்டும்
நகர்ந்து கொண்டே இருக்கிறது....!"

"அவள் கூந்தலைப் போல்
எங்களுக்கும் இறகுகள்
வேண்டும்" என
மயில்கள் உன்னைக் காட்டி
இறைவனிடம் முறையிட்டுக் கொண்டன....!

"அவள் நடை போல், என் நடை
அழகாய் இல்லை " என்று
அன்னப்பறவை அங்கலாய்த்துக் கொண்டது .....!

தாமரைப் பூ
தன்னிலை மறந்தது
உன் சக்கரைச் சிரிப்பில்.............!

தென்றலும் உன்னை தீண்டி
தன் ஆசை தீர்த்துக் கொண்டது
உன் கை அசைப்பில்.....!

புறாக்களும்
வெட்கப் பட்டன
உன் அழகின் இயல்பில்....!

மல்லிகையும்
மனம் லயித்தது
உன் சந்தன மனத்தில்.....!

கிளிகளும்
வாய் மூடிக் கொண்டன
உன் கொஞ்சல் மொழியில்.....!

அருவிகள்
ஆர்ப்பரித்தன உன் வருகையில்....!

உன் பல்லக்கைச் சுமந்த
என்னிடம் கேட்டன
"யார் இவள்?"

உரக்கச் சொன்னேன் "இவள்.........என் தேவதை........................!"

--விஜய் ஆனந்த்

Tuesday, May 31, 2011

தாய் வாசம் ...!

உச்சி முகர்ந்து
கன்னம் தடவி
தலை கோதி
நெற்றியில் முத்தமிடுகையில்
உன்னில் உணர்கிறேன்
- என் தாயின் வாசம்..............................!

--விஜய் ஆனந்த் 

Wednesday, May 25, 2011

வண்ணத்துப்பூச்சிக்கு பிறந்த நாள்

என் வாழ்க்கையே
உன் நினைவுகளுடன் தான்
என்றாகிவிட்ட போது
நீ தொலை தூரத்தில் இருந்தால் என்ன ?
தொடும் தூரத்தில் இருந்தால் என்ன ..?...பெண்ணே..!
--
என் இனிய  வண்ணத்துப்பூச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.....
--
நினைவுகளுடன்..
விஜய் ஆனந்த்

Tuesday, May 3, 2011

உன்னுள் நான் என்னுள் நீ...!

நீயும் நானும்
இதழ் சேர்த்த போதே
என் உயிர் உன்னுள்ளும்
உன் உயிர் என்னுள்ளும்
ஊற்றப்பட்டு விட்டதே கண்மணி..

உன் உயிர்க் காற்று
என் சுவாசத்துடன்
கலந்த பொழுது
எழுந்த வெப்பக் கதகதப்பில்
நம் காதல்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது கண்மணி ..

உன் விரல்கள்
என் விரல் கோர்த்த நேரத்தில்
தாயின் தொப்புள் கொடி உறவு
நமக்குள் பிணைக்கப் பட்டு விட்டது கண்மணி..

உன் கண்கள் வழியே
என்னைப் பார்த்த நொடியில்
என் உயிர்
மோட்சம் அடைந்து விட்டது கண்மணி..

-- விஜய் ஆனந்த்

Sunday, May 1, 2011

என்னடி சொல்வேன், என் இதயத்திடம்?

கண்களிடம் சொல்லிவிட்டேன்
உன் அழகிய முகம்
இனி தெரியாது என்று..

கைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் ஸ்பரிசம்
இனி கிடைக்காது என்று..

கால்களிடம் சொல்லிவிட்டேன்,
உன்னிடம் நோக்கி
இனி பயணமில்லை என்று..

காதுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் இனிய குரல்
இனி கேட்காது என்று..

தோள்களிடம் சொல்லிவிட்டேன்,
உன் தலை தாங்க
இனி இயலாது என்று..

வார்த்தைகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் மீது கவிதைகள்
இனி வேண்டாம் என்று..

சாலைகளிடம் சொல்லிவிட்டேன்,
நாம் சேர்ந்திருக்கும் நேரங்கள்
இனி இல்லை என்று..

உணர்வுகளிடம் சொல்லிவிட்டேன்,
உன் அன்பும்
இனி மலராது என்று..

எத்தனை சொல்லியும்
உன்னை நோக்கியே சாய்கிறதே -

என்னடி சொல்வேன், என் இதயத்திடம்?

-- விஜய் ஆனந்த் 

Thursday, April 28, 2011

முத்தம்....!

" பெண்ணே! ஒளிந்து கொள்
மழைத்துளிகள் முத்தமிட வருகின்றன
உன் அழகில் மயங்கி...!!
பாவம! அவைகளுக்கு என்ன தெரியும்
நீ ஒரு
நிலவு என்று....! "

-- விஜய் ஆனந்த்

Wednesday, April 20, 2011

ஒரு தேவதை

கார்த்திகா ......ஒரு தேவதை....