Wednesday, September 26, 2012

நெற்றிப்பொட்டு !

 இருளைக் கண்டு நீ அச்சப்படுவாயோ?
என்று எண்ணித் தான்
உன் நெற்றிப்பொட்டை எடுத்து
வானில் ஒட்டி வைத்து
அவைகளுக்கு பெயர் வைத்தேன்
நிலவென்றும், நட்சத்திரங்கள் என்றும்...!

--விஜய் ஆனந்த்

முத்தம் !

பெண்ணே ! நீ எனக்குக் கொடுக்கும்
முத்தங்களில் ஒன்றாவது தவறி
தன்னுள் விழாதா என்கிற
ஏக்கத்துடன் வந்து வந்து
திரும்புகின்றன கடல் அலைகள்...!

--விஜய் ஆனந்த்

Thursday, September 20, 2012

கிறுக்கல்கள் !

நீ நிலவா?
இல்லை
நிலவு நீயா?
--
உன்னைப் பார்த்து
வெட்கம் தாளாமல்
தன்னை மேகத்துக்குள்
மறைத்துக்  கொண்டாதோ நிலவு ?
--
தேன் குழைத்துச் செய்த
தங்கச் சிலையோ நீ?
--
கிளி வந்து
கொத்திச் செல்லும்
அத்திப் பழமோ
உன் இதழ்கள் !

--விஜய் ஆனந்த்



Friday, August 31, 2012

கவிதைக்கான கவிதைகள் !

என் செவிகளுக்கும்
நாவிருந்திருந்தால் 
உன் கொஞ்சல் மொழி சுவைத்து
தித்தித்திருக்கும் !
--

எப்படியாவது 
உன்னை விட அழகாக வேண்டும்
என்று
அழகுக்கலை கற்றுக் கொள்கிறதாம் 
நிலவு !
--

பூமி 
தன்னைத் தானே 
சுற்றிக் கொள்கிறதாம் !
ஒருவேளை 
உன் பேரழகைப் பார்த்த 
பேரதிர்ச்சியாய்  இருக்குமோ?
--

மழை பெய்யும் போது
வெளியில் சென்று விடாதே !
மழை உன்னழகில்
நனைந்துவிடப் போகிறது !

--விஜய் ஆனந்த் 

Thursday, August 9, 2012

நம்பிவிட்டேன் !



யார் சொல்லியும் நம்பவில்லை !
உன்னைப் பார்த்த நொடி நம்பிவிட்டேன் !
ஆம் !
தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் !

--விஜய் ஆனந்த்

Tuesday, July 31, 2012

படித்ததில் பிடித்தது !

உன் தெத்து பல்லும்
மெத்து கன்னமும்
என்னை மொத்தமாய்
தத்து எடுத்தது ..
செல்லமே ...!
--
உன் தத்து மொழியும்
குவியும் விழியும்
ஒராயிரம் அர்த்தம்
பொழியும் ..
அதை புரிய ஒரு
விளக்க உரை யாரரியார்..!

Monday, July 23, 2012

பேரழகு !


 எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா !
--
ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் !
ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் !
நீ கால் முளைத்த புஷ்பம் !
கடல் நுரையில் செய்த சிற்பம் !
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம் !
--
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !

வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும்
உன்னை போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே !
கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே !
ஓ… அழகே நீ வாய் பேச
கீதம் என்றேனே சங்கீதம் என்றேனே !
பேசாத மௌனத்தை கவிதை என்பேனே !
புது கவிதை என்பேனே !
கடல் ஓரம் நீயும் வந்தால்
புயல் வந்ததென்று அர்த்தம் !
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம் !

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !

உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால்
ஐந்து அல்ல ஐநூறு காப்பியங்கள் உண்டாகும் !
உந்தன் கூந்தல் ஈரத்தை தொட்டு போன காற்றை தான்
கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வின் வரமாகும் !
ஓ… அன்பே உன் இதழை தான் சிறைகள் என்பேனே !
கனி சிறைகள் என்பேனே !
மெலிதான இடையை தான் பிறைகள் என்பேனே !
தேய் பிறைகள் என்பேனே !
அடி அன்னபறவை ஒன்று
அன்று வாழ்ந்ததாக கேட்டேன் !
நான் கேட்ட அந்த ஒன்றை
இன்று கண்களாலே பார்த்தேன் !

எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா !
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா !
--
ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் !
ஏனோ எடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் !
நீ கால் முளைத்த புஷ்பம் !
கடல் நுரையில் செய்த சிற்பம் !
உன் முன்பு வந்து நின்றால்
அந்த சொர்க்கம் கூட அற்பம் !
--

Tuesday, July 17, 2012

போ நீ போ !


இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா..?
இருளிலே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா..?
--
என் காதல் புரியலையா  உன் நஷ்டம் அன்பே போ !
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ !
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ !
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ !

Thursday, July 12, 2012

மலர் !


மலர் என்ற
பெயருக்கு
அர்த்தம் புரிந்தது
என்
தோட்டத்து
பூக்கள்
உன் கை சேர்ந்து
இன்னொர்முறை
அழகாக
மலர்ந்தபோது !


-- விஜய் ஆனந்த்
 

மழையாய் வந்தாளே !


துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
--
பார்த்தால் பார்க்க தோன்றும் !
பேரை கேக்க தோன்றும் !
பூ போல் சிரிக்கும் போது
காற்றாய் பறந்திட தோன்றும் !
--
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
--
துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !
--
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ ?
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ ?
--
நெற்றி மேலே ஓற்றை முடி ஆடும் போது
நெஞ்சுகுள்ள மின்னல் பூக்கும் ! பார்வை ஆளை தூக்கும் !!
கன்னம் பார்த்தால் முத்தங்களால்  தீண்டத்தூண்டும் !
பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொலுசாய் மாறத்தோன்றும் !
அழகாய் மனதை பறித்து விட்டாளே !
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !
--
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் ! தோள்களில் சாயுவேன் !
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் ! நெஞ்சிலே தாங்குவேன் !!
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள் !
காயம் இன்றி வெட்டி போட்டாள் !!
 உயிரை ஏதோ செய்தாள் !
மவுனமாக உள்ளுக்குள்ளே பேசும் போதும்
அங்கே வந்து ஒட்டுக் கேட்டாள் !
கனவில் கூச்சல் போட்டாள் !

அழகாய் மனதை பறித்து விட்டாளே !
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா !
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா !

துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே !

துளி துளி துளி மழையாய் வந்தாளே !
சுடச் சுட சுட மறைந்தே போனாளே…!!!

Thursday, July 5, 2012

பதில் தெரியா கேள்விகள்


 கண்கள் மூடி
கன்னத்தில் கை வைத்து
தலை சாய்த்து
கீழ் உதட்டை பிதுக்கி
தோள்கள் குலுக்கி
புன்னகை உதிர்த்து
"தெரியாது"  என்று நீ
சொல்லும் அழகாய் ரசிப்பதற்காக
தினமும் உன்னிடம் கேட்கிறேன் உனக்கு
பதில் தெரியாத கேள்விகளை !

-- விஜய் ஆனந்த்

Wednesday, July 4, 2012

காலதேவதை !


நீ கடந்து போன அதிர்ச்சியில் இறந்தகாலம் !
நீ இருக்கும் மகிழ்ச்சியில் நிகழ்காலம் !
நீ வருவாய் என காத்திருப்பில் எதிர்காலம் !
இப்படி
முக்காலமும் ஆளும் காலதேவதை நீ !

-- விஜய் ஆனந்த்
 

Tuesday, July 3, 2012

நிலாப் பெண் !


உன்னைக் காணாத
மேகம்
கதறி அழுததோ?
--பெருமழை
*
உன் கால் பட்ட
பூமி
சிலிர்த்துத் துடித்ததோ?
--பூகம்பம்
*
உன் முகம் பார்த்த
நிலவு
முழுமையானதோ?
--பௌர்ணமி
*
உன்னைத் தீண்டிய
காற்று
மென்மையானதோ?
--தென்றல் காற்று
*
--விஜய் ஆனந்த்

Tuesday, June 26, 2012

அழகே அழகு.. !


அழகே அழகு.. தேவதை…!
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் !
--
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது !
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது !
பொன்முகம் தாமரை !
பூக்களே கண்களோ !
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம் !
--
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன !
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன !
மூங்கிலே தோள்களோ !
தேன்குழல் விரல்களோ !
ஒரு அங்கம் கைகள் அறியாதது !
--
பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன் !
போக போக வாழை போல
அழகை காண்கிறேன் !
மாவிலை பாதமோ !
மங்கை நீ வேதமோ !
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே !

தேவதை கவிதை !




கதிரவன் கண்விழிக்க‌
கடற்கரையோரம் நீ சென்ற‌
காலையில்
மாநாடு கூடிவிட்டதாம்
தேவதைகளின் ஊர்வலமென்று...!
--
 எல்லா கவிஞனும் கவிதை எழுத
உன் ஒருத்தியை மட்டும்
சுற்றி அலைவதால்
உன்னைக் கோள்கடத்தச் சொல்லி
தேவதைகள் சங்கத்தின் கோரிக்கை !
--
தேவதை உலகின்
அழகிப் போட்டிகளிலெல்லாம்
அளவுகோலும்
ஆதர்சன நாயகியும்
நீயென்பது உனக்கு தெரியுமா?
--
வெள்ளை தாவணியில் வெளியே வராதே
என்றால் கேட்டால்தானே!!!
பார்...
அழகென்று கர்வங்கொண்ட‌
ஆயிரம் தேவதைகளின் தற்கொலைதான்
இன்றைய தலைப்புச் செய்தி....!

--விஜய் ஆனந்த்

Tuesday, June 19, 2012

தேன் முத்தம் !


முத்தம் கொடுத்துவிட்டு
மூடி மறைக்காதே..!
உன் எச்சில் பட்ட என் உதட்டை
மொய்க்கின்றன தேனீக்கள் !

-- விஜய் ஆனந்த்

Monday, June 18, 2012

சிரிக்காதே பெண்ணே !



மீண்டும் ஒருமுறை
சிரிக்காதே பெண்ணே !
நீ
ஒருமுறை சிரித்ததற்கே
இறந்து கிடக்கிறது இசைத்தமிழ் !


--விஜய் ஆனந்த்

Friday, June 8, 2012

புத்தகமாய் !

என்னையும்
விரலால் அணைத்து
இதழால் படித்து
இதயத்தில் - பத்திரமாய்
பதிய வைத்திருப்பாய்
நானும் உன் பாடப்புத்தகமாய்
பிறந்திருந்தால் !

-- விஜய் ஆனந்த்

Saturday, May 26, 2012

கிறுக்கல்கள்

நாளைக்கும் நீ
கோவிலுக்கு வரவேண்டும்
என்று வேண்டிக்கொண்டது
நீ கும்பிட்டு வந்த கோவிலின் சாமி !
--
எல்லா விரல்களையும் விட
பூரிப்பாய் இருந்தது
நீ பிடித்து நடந்து வந்த
என் கை நடுவிரல் !
--
கோபத்தில்
செடியிலேயே சிவந்திருக்கும்
நீ பறிக்காமல் விட்ட மருதாணி இலைகள் !

--விஜய் ஆனந்த்

பூ பிறந்தநாள் !

உலகின்
மிக அழகிய
மலரின் பிறந்தநாள் இன்று !
--
இன்று பூக்கும்
ஒவ்வொரு மலரும்
என்னவளின் பாதத்தை
சேரட்டும் !
--விஜய் ஆனந்த்

Thursday, May 10, 2012

படித்ததில் பிடித்தது


என் இயற்பியலும் இருவரின் வேதியியலும்!


சூரியனாய் ஒளிவீசும்
அவள் முகம்!

உடலாகிய குடும்பத்தில்
சிவப்புச் செவ்வாய்
அவள் உதடு!

ஒளியைப் பிரதிபலிக்கும்
இதமான திங்கள்காதலைப் பிரதிபலிக்கும்
அவள் கண்கள்!

ஞாயிறு உடன்
ஒளிவீச முயன்று
தோற்கும் புதனாய்
அவள் முகத்துடன்
தோற்கும் பொட்டு!

மையத்தைச் சுற்றும்
இரட்டை நட்சத்திரங்களாய்,
அவளையே சுற்றும்
முகத்தின் மையத்தில்
எனது கண்கள்!

ஹீலியமாய் உருவெடுக்கும்
ஹைட்ரஜன் போல்
அன்பினால் உருவெடுக்கும்
எனது காதல்!

பூமியின் தேவதையுடன்
பேசாமல் பேசிக்கொள்ளும்
எனது மனது!

அவள் - நான்
நான் - அவள்!

Friday, May 4, 2012

விதை !


நீ
கடித்துத் துப்பிய உன்
நகங்களை
விதைத்து நீரூற்றியிருந்தால்
விளைந்திருக்கும் அழகு !

--விஜய் ஆனந்த்
 

Thursday, April 19, 2012

படித்ததில் பிடித்தது !


நீ கோலமிட வரும்
காலம் பார்த்து காத்திருந்து
உன்னை காதலிக்க
ஒளியெனும் தூது விட்டு
கதிரவன் கண் சிமிட்ட!
உன் கொலுசின் ஒலிக்கேட்டு
மோகினி பிசாசு வருகிறதென்று
பொய்சொல்லி
தன் நட்சத்திர தோழிகளை
கூட்டிக்கொண்டு ஓடி ஒளிகிறது
பொறாமைப்பிடித்த நிலவு!
உன் வரவை எதிர்ப்பார்த்து
பேரழகி வருகிறாள்
அவள் கூந்தலில்
நான் குடியேறப்போகிறேன்
என பெருமைப்பொங்கி
நறுமணம் கமழ்ந்து
புன்னகை பூக்கிறது பூக்கள்!
உன்னுடலில் ஒட்டிக்கொள்ள
ஆசைக்கொண்டு
உயிர் துறந்த கூட்டுப் புழுக்களின்
கூட்டு முயற்சியில்
பட்டுப்பாவாடையில் பவனி வருகிறாய் நீ!
இந்த மண் உனக்கு
தன் மடி மீதில்
பச்சைக்கம்பளம் விரித்து
தாலாட்டக் காத்திருக்கிறது!
இவை அனைத்திற்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நீ எனைக் கானவே வருகிறாய் என்பது!
உன்னருகில் நான் வந்து
கட்டியணைத்து கவிபாட
மதிய சூரியன்
என்மேல் அனல் கக்கி உமிழ்கிறான்
ஆதங்கம் கொண்டு
நம்மைப் பிரித்திடவே !
நாம் மீண்டும்
பிரியாமல் பிணைந்திடவே
மாலை நேரம் வரை
காத்திருந்து பார்த்து பார்த்து
கண்கள் மங்கி
ஒளி இழந்து ஓடி ஒளிகிறான்
மாலை நேரத்து ஆதவன்!
போட்டிக்கு பேரழகி வந்தாளென்று
ஓடி ஒளிந்த நிலவு-இரவில்
பொலிவாகி வெளி வருகிறது
அவளிடத்தில் காதல் கொண்ட
நம் ஆதவன்
கடுப்பாகி மீண்டும் நம்மிடத்தில்
சரணாகதி ஆனானென்று சந்தோசத்தில்!
பூக்கள் வாடின
புன்னகை பூத்து வந்தோமே
பூவை இவள் கூந்தல் சேர
நம்மை விட்டு இவள்
அவனிடத்தில் புன்னகைக்கிறாளே என்று!
உன்னை தொட்டு தழுவிய
என்னைக் கண்டு
கூட்டுப் புழுக்களும்
கசங்கி கதறி அழுதன
இவளுக்காய் உயிர் இழந்தோம்
இவள் அவனுக்காய் உயிர் வாழ்கிறாளே என்று!
பூமி விரித்த பச்சைக் கம்பளம் கூட
பட்டுப்போய் காட்சியளிக்கிறது!
என்னவளே
என் முகத்தைமட்டும் பசுமையாக்கி
எல்லோர் முகத்தையும்
வறட்சியாக்கி விட்டாய் நீ!
நீ என் அருகாமை எப்பொழுதும்
வேண்டுமென்று
உன்னை முப்பொழுதும் நினைக்கிறது என் உள்ளம்!

உன் பிஞ்சுமுகம் பார்க்கும் போது !


உன் பிஞ்சுமுகம்  பார்க்கும்  போது
இந்த வாழ்வின் மீதோர்
பற்றுதல் வளர்கிறது!
உன்னை பார்த்த நொடியில்
பறந்து போகிறது
என்னை பற்றியிருக்கும் பாரங்கள்!
என் செல்லமே..
எங்கிருந்து எடுத்து வந்தாயோ
எமை மாற்றும் மந்திரத்தை!

--விஜய் ஆனந்த் 

Thursday, April 12, 2012

கிறுக்கல்கள் !


தற்கொலை 
செய்து கொள்ளும் 
நீ பிடிக்காத வண்ணத்துப்பூச்சிகள் !
-
சற்று நேரத்தில்
வெளிறிப் போகும் 
நீ பார்க்காத வான்வவில் !
-
நீ 
கடந்து சென்ற பின்
மரங்களுக்கெல்லாம்
"பூவுதிர் காலம்"
-
பேனா மூடியை
திறக்கும் போதெல்லாம்
கவிதைகளாகிறாய் நீ !
-
உருக மறந்து 
உன்னை பார்த்து 
உறைந்து  கிடக்கிறது 
நீ ஏற்றிய மெழுகுவர்த்தி !
-

-- விஜய் ஆனந்த்

என் கனவில் நீ !



கண்களுக்குள் அலைபாயும்
கருவிழிகள் ...
மேலுதட்டு வியர்வை
துளிகளுடன் ,
உனக்கான
இதுபோன்ற கனவில்
நீ !!

மூச்சுதொடும் தூரத்தில்
நெற்றி விழி நாசி அதரம்
கடந்து வந்து,

இம்முறையேனும்
ஊடலில்
ஜெயிக்க எண்ணி,
அதற்கு மேலும் தொடர
மனமின்றி ,

தலையணை கட்டி
தூங்கிப் போகிறேன் ..!!

--விஜய் ஆனந்த்

என் தேவதை அவள் !



 உன்னதமானவள், சிறந்தவள்,
ஒப்பற்ற்வள்
தூயவள், என் தாயவள் !
-
வசீகரிப்பவள், வசப்படுத்தியவள்
வசந்தமானவள் 
எனக்குச் சொந்தமானவள் !
-
தேவதையானவள், பூ அவள் 
பூந்தேர் அவள் 
என் புன்னகை அவள் !
-
மணமுடையவள், நல்ல
குணமுடையவள், என்
குழந்தையவள் !
-
அழகானவள், வனப்புள்ளவள்
கவர்ச்சியானவள், இதமானவள்
எழிலானவள், இனியவள்
என் உள்ளங் கவர்ந்தவள் !
-
மயக்குபவள், மந்திரக்காரி இவள்
பிரகாசமானவள்
மிருதுவானவள் , மல்லிகைப் பூ இவள் !
-
நளினமானவள், நற்பன்புள்ளவள்
நயமானவள்
நேர்த்தியானவள், நிகரற்றவள்
மேலானவள், மென்மையானவள் 
என் மனைவி அவள் !

-- விஜய் ஆனந்த் 

Wednesday, April 4, 2012

ஆரிரோ ஆரிரோ !

~~என்னவள் எனக்கு பிறந்த முகல் மகள் .....என்னை ஒரு தகப்பனாய் பாவித்து என் செல்ல மகளுக்காக நான் பாடும் பாடல் ...இது என் குழந்தை கார்த்திகா-விற்கு சமர்ப்பணம்...!~~






ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !


தாயக தந்தை மாறும் புது காவியம் !
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம் !


இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு 
ஓருயிர் ஆகுதே !
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே !

விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..!

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே !
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே !
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே !
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே !
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே !


இரு மனம் ஒன்று 
சேர்ந்து  இங்கே மௌனத்தில் பேசுதே !
ஒரு நொடி போதும் போதும் என்று குரல் கேட்குதே !
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே !

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு !

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் !
கேட்காத ஓர் பாடல் அதில் இசை 
மீட்டினாள் !


அடடா ! தெய்வம் இங்கே வரமானதே !
அழகாய் வீட்டில் விளையாடுதே !
அன்பின் விதை இங்கே மரமானதே !
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே !
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே !
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே !

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு !
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
  !

Tuesday, April 3, 2012

வா வா என் தேவதையே !

~~என்னவள் எனக்கு பிறந்த முகல் மகள் .....என்னை ஒரு தகப்பனாய் பாவித்து என் மகளுக்காக நான் பாடும் பாடல் ...இது என் குழந்தை கார்த்திகா-விற்கு சமர்ப்பணம்...!~~




வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…!
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை!
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை!
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை!
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை!
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்!
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்!
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்!
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மீசையில்லாத மகன்  என்று சொன்னேன்!
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….!
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…!

ஆசை !





எனக்கு 
உன் மேல் உள்ள அன்பை
காதல் என்ற ஒற்றைச்சொல்லில் 
அடக்கிவிட முடியாது..!

அது தாயின் பாசம் !
தந்தையின் உவகை !
அண்ணனின் அரவணைப்பு !

உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆசையில்லை !
உனக்கு இந்த உலகத்தை சுற்றிக் காட்ட ஆசை !

உன்னுடன் பேச  ஆசையில்லை !
உன் மழலை மொழி கேட்க ஆசை !

நான் உன் மடி சாய்ந்து 
நீ என் தலை கோதி விளையாட ஆசை !
நீ என் மார்பில் உறங்க ஆசை !
உன்னை என் கையில் ஏந்த ஆசை !
உன் பிஞ்சு விரல் பிடித்து நடக்க ஆசை !
உன் தோல் சாய்ந்து அழ ஆசை !
உன் மடியில் உறங்க ஆசை !

உன்னுடன் நிலவை ரசிக்க ஆசை !
உனக்கு நிலாச்சோறு ஊட்ட ஆசை !

உனக்கு மகனாக மாற ஆசை !
நீ எனக்கு மகளாக மாற ஆசை !
உன் கால் கொலுசை மாட்டிவிட ஆசை !
உன் பிஞ்சு பற்கள் என் கன்னம் தீண்ட ஆசை !

நான் உறங்க நீ ரசிக்க ஆசை !
நீ உறங்க நான் ரசிக்க ஆசை !

என் உள்ளம் பகிர ஆசை !
உன் உள்ளத்தில் வசிக்க ஆசை !
உன்னையே சுவாசிக்க ஆசை !
நீ என்னை நேசிக்க ஆசை !

உன்னுடன் உலகம் ரசிக்க ஆசை !
உன்னையே என் உலகமாக்கி ரசிக்க ஆசை !

கட்டிலில் ஒன்றுகூடி 
காதலை பெற்றெடுக்க ஆசை !
காதலின் கைபிடித்து நடக்க ஆசை !

நரை கூடிக் கிழமான போது
உன் மடியில் 
என் உயிர்  பிரிய  ஆசை !

--விஜய் ஆனந்த் 

Wednesday, March 21, 2012

தாலாட்டும் காற்றே வா !



தாலாட்டும் காற்றே வா !
தலை கோதும் விரலே வா !
தொலைதூர நிலவே வா !
தொட வேண்டும் வானே வா !

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் 
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமல் 
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் 
என் ஆவி சிறிதாகி போவேனோ?

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...!

கண்ணுக்குள் கண் வைத்து,
கண் இமையால் கண் தடவி,
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ?
பேச்சிழந்த வேளையிலே,
பெண்ணழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை நுகராமல் போவேனோ ?
உன் கட்டுக்கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத்தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை 
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை 
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் 
அதை உனக்கு ஒலிபரப்ப மாட்டேனோ?

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...!

ஒரு நாள் ஒரு பொழுது,
உன் மடியில் நான் இருந்து,
திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து தல்லாடும் மரம் ஏறி,
இலையெல்லாம் உன் பெயரை எழுதாமல் போவேனோ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ?
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி 
நீ வாழும் வரை நானும் வாழேனோ?

என் உரிமை நீதானோ
என் உரிமை நீதானோ...!

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் 
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமல் 
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் 
என் ஆவி சிறிதாகி போவேனோ?

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...!